பணத்தை கொட்ட வரும் சனி, புதன் கிரகங்கள்.. த்வி துவாதச யோகத்தால் யாருக்கு ஜாலி!
By Pandeeswari Gurusamy May 09, 2025
Hindustan Times Tamil
சனி மற்றும் புதன் கிரகங்கள்
மே 9 ஆம் தேதி இரவு 10:58 மணிக்கு ஒன்றுக்கொன்று 30 டிகிரி கோணத்தில் இருப்பதால், த்வி துவாதச யோகம் உருவாகிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி, மே 9 ஆம் தேதி, சனி மற்றும் புதன் கிரகங்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்துகொண்டே ஒரு யோகத்தை உருவாக்க உள்ளன. சனி மற்றும் புதன் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 30 டிகிரி கோணத்தில் இருப்பதால், த்வி துவாதச யோகம் உருவாகிறது.
இந்த த்வி துவாதச யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும். எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கே காணலாம்.
மகரம்: நல்ல பலன்களை அளிக்கும். இந்த யோகம் மகர ராசிக்கு மிகவும் சுபயோகமாக இருக்கும். வீட்டில் நல்ல சூழ்நிலை நிலவும். மாணவர்கள் உயர்கல்வி சம்பந்தமான தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் என கூறப்படுகிறது.
கும்பம்: வெற்றி கிடைப்பதுடன் அதிர்ஷ்டமும் துணை நிற்கும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த சமயத்தில் திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் காணலாம் என கூறப்படுகிறது.
துலாம்: சுப பலன்களை அளிக்கும். நீண்ட காலமாக நின்றுபோன பணிகள் நிறைவேறும். பணியிடத்திலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கடினமாக உழைத்தால் இந்த ராசிக்கு இது பொற்காலம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும் என கூறப்படுகிறது-
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன