மாஸ் காட்ட போகும் மகர ராசி! 4 மாதத்தில் 8 அதிஷ்ட யோகங்கள்! சனி வக்ர பலன்கள்!
By Kathiravan V Jun 28, 2024
Hindustan Times Tamil
ஆனி மாதம் 16ஆம் தேதி முதல் ஐப்பசி மாதம் 29ஆம் தேதி வரை ஐந்து மாத காலத்திற்கு சனி பகவான் வக்ரம் பெறுகிறார். கும்ப ராசியில் பயணித்து வந்த சனி பகவான் இனி பின்புறமாக பயணிக்கிறார். பாவக் கிரகங்கள் வக்கிரம் பெற்றால் சுப பலன்களை செய்யும், சுப கிரகங்கள் வக்கிரம் பெற்றால் தீமை செய்யும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
சனி வக்ரம் பெற்ற காலத்தில், வக்ர சனியை குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் பார்த்தால் சனி பகவானின் கெடுபலன்கள் குறையும்.
மீனத்தில் ராகுவும், மேஷத்தில் செவ்வாய், ரிஷபத்தில் குரு, மிதுனத்தில் சூரியன், புதன், சுக்கிரன் நிற்பதால், ஆபரண யோகம் உண்டாகின்றது. இதனால் குடும்பம் குதுகலம் ஆக இருக்கும், தேக ஆரோக்கியம் சீராக ஆனந்த படுத்தும். செல்வம், செல்வாக்கு கூடும். பணி சிறப்பு அடையும். ஊதியம் மற்றும் இதர சன்மானங்கள் கிடைக்கும்.
வரக்கூடிய ஆடி மாதத்தில், செவ்வாய் சுக்கிரனையும், குரு, செவ்வாய், சுக்கிரன், சனி கிரகங்கள் தொடர்பால் சுக போகம் கிடைக்கும்.
குருவுக்கு கேந்திரத்தில் சனி பகவானும், சனிக்கு கேந்திரத்தில் குரு பகவனும் உள்ளதால், மகரம் ராசிக்காரர்களை வாட்டி வதைத்த கஷ்டங்கள், வேதனை, பழிபாவம், அவப்பெயர் உள்ளிட்டவை கழியும்.
ஆவணி மாதத்தில் சிம்மம் ராசியில் உள்ள சூரியன், சுக்கிரனை கும்பம் ராசியில் உள்ள சனி பகவானை பார்க்கின்றனர். இந்த காலங்களில் தொழில் வர்த்தகத்தில் புதிய உத்வேகம் பிறக்கும். மந்த நிலை நீங்கி ஏற்றம் கிடைக்கும்.
ஐப்பசி மாதத்தில் சூரியன், புதன் கிரகங்கள் துலாம் ராசுயிலும், சுக்கிரன் விருச்சிகம் ராசிக்கும் வருகின்றனர். சனி பகவான் வக்ர நிவர்த்தி பெருவர். ரிஷப குரு வக்ரம் பெறுவார். இதனால் ரிஷப குருவோடு, சுக்கிரன் பரிவர்தனை யோகத்தை உண்டாக்குகிறார்.
புரட்டாசி மாதத்தில் சூரியன், சுக்கிரன், கேது ஆகிய கிரகங்கள் கன்னியில் நிற்பதால், பரிவர்தனை யோகம் உண்டாகிறது. 9 மற்றும் 10 உடையவர்கள் இணைய தொழில்கள் சீராகி ஆனந்தப்படுத்தும்.
இதனால், வாழ்கை புது பொலிவு பெறும். இயல்வு வாழ்கை மகிழ்ச்சி அளிக்கும். எதிரியின் இம்சைகள் இருக்காது, உடல்நலம் சீராக ஆனந்த படுத்தும். கணவன், மனைவி உறவுகள் ஆனந்தமாக இருக்கும். மகரம் ராசிக்காரரக்ள் காளிங்க நர்தன கிருஷ்ணரை தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவக்ர சனி பகவானின் கொடூரம் குறைந்து நன்மைகள் கிடைக்கும்.
தேனி ,மாவட்ட ,மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இது தான். இதுவரை மதுரையில் இருந்துக் டீசல் என்ஜின் ஆக இயக்கப்பட்டு வந்த ரயில் முழுவதுமாக மின்சார என்ஜின் ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.