சனி பகவான் பெயரை கேட்டாலே பயமா.. சனி அருள் பெற இந்த 5 பரிகாரங்களை ட்ரை பண்ணுங்க!

By Pandeeswari Gurusamy
May 07, 2025

Hindustan Times
Tamil

சனி ஜெயந்தி சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாளில் சில குறிப்பிட்ட பரிகாரங்களைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம். சனி ஜெயந்தி இந்த வருடம் மே 27, 2025, செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.

 இந்து மதத்தில், சனி பகவானின் ஆசிகளைப் பெறுவதற்கு சனி ஜெயந்தி தினம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சனி ஜெயந்தி அன்று சனிதேவரை மகிழ்விக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சனி ஜெயந்தியன்று சனி பகவானுக்கு எள் எண்ணெய் அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் சனியின் தீய பலன்கள் குறையும் என்பது நம்பிக்கை.

சனி ஜெயந்தியன்று அரச மரத்தின் கீழ் எள் எண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்வார் என்பது ஐதீகம்.

சனி பகவானின் அருளைப் பெற சனி ஜெயந்தியன்று கருப்பு நிற ஆடை, குடை, உணவு மற்றும் இரும்புப் பொருட்களை தானம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

சனி ஜெயந்தியன்று சனி ஸ்தோத்திரம், சனி மந்திரம் மற்றும் சனி சாலிசா பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ந்து அருள் புரிவார். சனி ஜெயந்தியன்று சனி பகவானை மகிழ்விக்க அனுமன் வழிபாடு செய்து, அனுமன் சாலிசா பாராயணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

சனி ஜெயந்தியன்று கருப்பு நிற நாய்க்கு எள் எண்ணெய் தடவிய ரொட்டியை உணவாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.

அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!