'நான் தயாரித்த சுபம் படத்தைப் பார்த்த பிறகு,நீங்கள் நன்றாகச் சிரிப்பீர்கள்’ - சமந்தா
By Marimuthu M May 05, 2025
Hindustan Times Tamil
நட்சத்திர நாயகி சமந்தா தயாரிப்பாளராக மாறியுள்ளார். நடிகை சமந்தா முதல்முறையாக சுபம் என்ற தெலுங்கு படம் ஒன்றினைத் தயாரித்துள்ளார்.
சுபம் படத்திற்கு விவேக் சாகர் பின்னணி இசையமைத்திருக்கிறார். சுபம் திரைப்படம் வரக்கூடிய மே 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதையொட்டி, சுபம் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு மே 4-ல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர் சமந்தா கலந்துகொண்டு, சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, நடிகை சமந்தா,"நான் விசாகப்பட்டினத்திற்கு வரும்போதெல்லாம் ஒரு பிளாக்பஸ்டர் படம் வரும்'’ என்றார், சமந்தா.
மேலும், ‘விசாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்ட மஜிலி, ஓ பேபி, ரங்கஸ்தலம் ஆகியப் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன’ என்றார், சமந்தா.
'விசாகப்பட்டின ரசிகர்களைப் பார்த்ததும் உண்மையான அன்பு என்றால் என்னவென்று எனக்குப் புரிந்தது’ - நடிகை சமந்தா.
'ஒரு தயாரிப்பாளராக, நான் இந்த 'சுபம்' படத்தை ஒரு புதிய யோசனையுடன் தொடங்கினேன். புதியவர்களைக் கொண்டு, புதிய கதைகளை உருவாக்கி, அனைவரையும் மகிழ்விக்கும் நோக்கத்துடன் தொடங்கினேன்’ - சமந்தா.
'அதுதான் எனது குறிக்கோள். மே 9ஆம் தேதி உங்கள் குடும்பத்துடன் எங்கள் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நீங்கள் நன்றாகச் சிரிப்பீர்கள்’ சமந்தா.
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!