நடிகை ஷோபாவும் பாலுமகேந்திராவும் நன்றாக பழக ஆரம்பித்தார்கள். படப்பிடிப்பில், தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.இதனையடுத்துதான் அவர்கள் இருவரும் காதலித்து வந்தது கோலிவுட்டிற்கு தெரிந்தது. 

By Kalyani Pandiyan S
Apr 28, 2024

Hindustan Times
Tamil

பாலு மகேந்திராவும், ஷோபாவும்  கல்யாணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில்தான் ஷோபா தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியே வந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதில், ஷோபா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் பாலு மகேந்திரா தான் அவரை கொலை செய்துவிட்டார் என்றும் அந்த வழக்கில் இருந்து பாலுவை காப்பாற்றியது எம்.ஜி,ஆர் என்றும் சொல்லப்பட்டது. 

ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். அதில் சிறப்பு விருந்தினராக எம்ஜிஆரும் கலந்து கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்கும் பொழுது, பாலு மகேந்திரா உரிமையாக எம்ஜி ஆர் -ன் தோள் கையை போட போக, அதை எம்.ஜி.ஆர் அனுமதிக்காமல், தட்டி விட்டார். 

இதனையடுத்து அவர்கள் இணைந்து இருக்கும் போட்டோக்கள் செய்திக்காக பத்திரிக்கைக்கு சென்றது. ஆனால் அன்று இரவே ஜே பி ஆர் பாலுமகேந்திராவுடன் எம்.ஜி.ஆர் இருக்கும் புகைப்படங்கள் எதுவும் செய்திகளில் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதற்கு காரணமாக, ஒரு குற்றவாளியுடன் நான் நிற்பது மக்களிடம் சென்று சேரக்கூடாது என்றும் எம்.ஜி,ஆர் விரும்பியதாக சொல்லப்படுகிறது

கல்லீரல் கொழுப்பா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்!

pixabay