பொருளாதாரத்தில் மேலோங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி ஜோதிடர் பேட்டி 

By Kalyani Pandiyan S
Jun 30, 2024

Hindustan Times
Tamil

பொருளாதாரத்திற்கான கிரகங்களாக பார்க்கப்படுவது சுக்கிரன் மற்றும் குரு. ஒரு ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி தனத்திற்கான இடமாக இருப்பார். அதாவது, உங்கள் லக்னத்திற்கு இரண்டாவது அதிபதி யாரோ, அவரை நாம் பொருளாதாரத்திற்கான கிரகமாக எடுத்துக் கொள்ளலாம். சுக்கிர பகவான் இலட்சத்தில் இருக்கக்கூடிய பணத்திற்கு காரகன். குரு பகவான் பெரும் பணத்திற்கு காரகன். அதாவது கோடியில் புரளும் பணத்திற்கு காரகன் ஆவான். 

இந்த பொருளாதாரத்தை, பிரமாண்டமாக காட்டக்கூடிய கிரகம் ராகு. இந்த பொருளாதாரத்தை நசுக்கி சுருக்கக்கூடிய கிரகம் கேது.. ஒரு ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி என்று சொல்லக்கூடிய கிரகமானது 6, 8, 12  ஆகிய இடங்களில் மறைந்தோ அஸ்தங்கதம் அல்லது  நீச்சம் அடைந்து இருந்தால், பொருளாதாரத்தில் மந்த நிலை உருவாகும். இதனுடன், அஷ்டமத்து சனி, கண்டக சனி உள்ளிட்டவை இணையும் பொழுது, சொல்ல முடியாத போராட்டம் உருவாகும். 

நீங்கள் பிறந்த மாதத்தில் பத்மநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். அங்கு விளக்கு ஏற்றி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதே போல திருப்பதி கோயிலுக்கு மாதத்தில் வரக்கூடிய முதல் திங்கட்கிழமை சென்று வழிபடுங்கள். சோட்டானிக்கரை அம்மையாரை  வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அலங்காரமத்தில் பாருங்கள்.  இதை நீங்கள் செய்யும் பொழுது உங்களுக்கு பொருளாதாரம்  உயர்கிறதோ இல்லையோ. நீங்கள் திருப்திகரமாக வளர்வதற்கு அவை உங்களுக்கு உதவியாக இருக்கும். 

இதற்கு பரிகாரம் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஸ்ரீரங்கம் மகாலட்சுமி ரங்கநாதர் கோயிலுக்கு வருடத்தில் ஒரு முறையேனும்  வெள்ளிக்கிழமை சென்று வழிபட்டு வாருங்கள். அதேபோல வருடத்தில் ஒரு முறையேனும் திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் உள்ள குரு பகவானே வியாழக்கிழமை அன்று வழிபட்டு வாருங்கள். 

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் புதினா இலைகளை வெறும் வாயில் மென்று தின்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்