கோடைக் காலத்தில் இருக்கும் குறைவான செரிமான இயக்கத்தின் காரணமாக குழந்தைகளுக்கு ஒரு சில உணவுகளை கொடுக்க கூடாது. இதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

By Suguna Devi P
Mar 30, 2025

Hindustan Times
Tamil

வீட்டில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு மிகவும் முக்கயமானது ஆகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். 

எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடும் போது  அஜீரணம் மற்றும் உணவு அமிலத்தன்மை ஏற்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த உணவுகளை கொடுப்பதை தவிர்த்துடுங்கள். 

ஐஸ் கட்டிகள் கலந்த, குளிர் சாதனபெட்டியில் வைத்த எந்த ஒரு பானத்தையும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இது தொண்டை வலியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 

கோடைக்காலம் என்பதால் அனைவரும் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் அடிக்கடி ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். குழந்தைகளுக்கு முடிந்த அளவிற்கு ஐஸ்கிரீம் கொடுப்பதை தவிரத்துடுங்கள். 

காபி குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்பட வழிவகுக்கும். குழந்தைகளுக்கு கோடை காலத்தில்  காபி கொடுக்க வேண்டாம். 

துரித உணவுகளான பர்கர், நூடுல்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். 

குழந்தைகளுக்கு கோடையில் கிடைக்க கூடிய எல்லாவிதமான சீசனல் பழங்களையும் கொடுக்கலாம். இது அவர்களை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதோடு, புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும். 

நெய் ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..! இந்த 6 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

image credit to unsplash