வீட்டில் ருசியான தேங்காய் சாதம் செய்வது எப்படி என அறிந்து கொள்வோமா?
By Marimuthu M Apr 30, 2025
Hindustan Times Tamil
தேங்காய் சாதம் செய்யத்தேவையானவை: - பாசுமதி அரிசி – 1 கப்,
- முதன்மை தேங்காய் பால் (மூல பால்) – 1 கப்,
- இரண்டாம் தேங்காய் பால் – 1.5 கப்,
- எண்ணெய் அல்லது நெய் – 2 மேசைக்கரண்டி,
- கடுகு – 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் சாதம் செய்யத்தேவையானவை: - உளுந்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி,
- பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது),
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- உப்பு – தேவைக்கு ஏற்ப
தேங்காய் சாதம் செய்முறை:- - அரிசியை நன்கு கழுவி 15–20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி எடுத்துவைக்கவும்.
1 முழு தேங்காயை துருவி, அதில் ஒரு கப் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்துப் பிழியுங்கள். இது முதன்மை தேங்காய் பால். மீண்டும் நீர் சேர்த்து பிழிந்தது இரண்டாம் தேங்காய் பால் ஆகும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனைத்தொடர்ந்து, தாளிப்பில் அரிசியையும் இரண்டாம் தேங்காய் பாலும் சேர்த்து, உப்பு போட்டு, நன்கு மூடி சிறிய சூட்டில் வேகவைக்கவும்.
அரிசி சுமார் 90% வெந்த பிறகு, முதன்மை தேங்காய் பாலைச் சேர்த்து மெதுவாக கிளறவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.தற்போது சூடான தேங்காய் சாதம் ரெடி!
குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள்