உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்வதும், செரிமானத்தை எளிதாக்குவதும், உடலின் சமநிலையைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது கல்லீரல். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியமாகும்
By Muthu Vinayagam Kosalairaman Apr 26, 2025
Hindustan Times Tamil
உடல் உள் உறுப்புகளில் அதிக எடை மிக்கதாக இருக்கும் உறுப்பாக இருந்து வரும் கல்லீரலுக்கு நாம் விரும்பி சில உணவுகளே ஆபத்தானவையாக மாறக்கூடும். கல்லீரலுக்கு ஒவ்வாத உணவுகள் மூலம் கொழுப்புச் சேர்தல், வீக்கம் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்
செயற்கை இனிப்புகள் மற்றும் அதிகப்படியான துரித உணவு ஆகியவற்றால் கல்லீரல் செயல்பாட்டில் பாதிப்புகள் ஏற்படலாம். கல்லீரல் ஆரோக்கியத்தில் உகந்த செயல்பாட்டை பராமரிக்க சீரான, ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது மிக அவசியம்
கிளைசெமிக் குறியீட்டை அதிகரிக்கும் உணவுகள் உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். பழங்கள், தேன் ஆரோக்கியமான தேர்வுகளாக தோன்றினாலும், அதில் இருக்கும் பிரக்டோஸ் கல்லீரலில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தும். காலப்போக்கில் இவை கொழுப்பு குவிவதற்கு வழிவகுத்து, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) அபாயத்தை அதிகரிக்கும்
பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள், சோடாக்கள், பேக் செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் கெட்ச்அப் போன்றவற்றில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் கலவை நிறைந்துள்ளன, இது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்லீரலை அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. இது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்
நெய், வெண்ணெய், சிவப்பு இறைச்சி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவை நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கல்லீரலில் கொழுப்பு படிவுகளை உருவாக்க வழிவகுக்கும். இதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால் சிரோசிஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்
பச்சையாகவோ அல்லது சரியாக சமைக்கப்படாத இறைச்சிகள், குறிப்பாக மீன், வைரஸ் தொற்றுகள் அல்லது ஒட்டுண்ணிகள் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன, அவை கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். ஹெபடைடிஸ் E மாசுபட்ட இறைச்சியிலிருந்து உருவாகிறது என்றும், கல்லீரல் வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது
பச்சையாக காய்கறிகளை சாப்பிடுவது உணவுகள் உடைந்து சரியாக உறிஞ்சப்படுவது கடினமாக்கும். இது உறுப்புக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. தக்காளி, வெள்ளரிகள் சரியாக கழுவப்படாவிட்டால், உடலில் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். கல்லீரலின் நச்சு நீக்கும் திறனுக்கு அழுதத்தை ஏற்படுத்தும்
சும்மா கமகமன்னு ஆந்திரா ஸ்டைலில் தக்காளி பாத் செய்வது எப்படி?