பல பகுதிகளில் பருவமழை பெய்து வரும் நிலையில் இந்த காலத்தில் கண்களில் சில தொற்றுகள் ஏற்பட்டு பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன

By Muthu Vinayagam Kosalairaman
Jul 06, 2024

Hindustan Times
Tamil

அதிகபட்ச ஈரப்பதம், ஈரத்தன்மை காரணமாக கண்களில் தொற்றுகள் ஏற்படலாம். இவை பின்னாளில் கண்களின் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் 

மழை காலத்தில் கண்களில் ஏற்படும் பொதுவான தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் 

இளம் சிவப்பு கண் நோய் அல்லது பிங்க ஐ என்று அழைக்கப்படும் விழி வெண்படல அழற்சி வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண் இமைகளின் உள் மேற்பரப்பை அடிக்கோடாக இருக்கும் மெல்லிய சவ்வு பகுதியில் அழற்சியாகும். அரிப்பு, ஒளி உணர்திறன், சிவப்பு ஆகுதல் மற்றும் நீர் வெளியேற்றம் ஆகியவை அறிகுறிகளாக இருக்கின்றன  

ஸ்டை என்று அழைக்கப்படும் கண்கட்டி பாக்டீரியா தொற்று ஆகும். இது கண் இமையின் விளிம்புக்கு அருகில் சிவப்பு மற்றும் வலியுடன் கூடிய கட்டியை ஏற்படுத்துகிறது. இது கிட்டத்தட்ட பரு போன்றது. மழை காலத்தில் பொதுவாக ஏற்படும் பாதிப்பாக உள்ளது

நீண்ட நேரம் டிஜிட்டல் திரையை பார்ப்பது, இயல்பாக கண் இமைக்காமல் இருப்பதும் கண்களில் வறட்சியை ஏற்படுத்துகிறது. கண்கள் வறட்சியானால் கண்ணீர் வெளியேறுவது சிரமமாகும்

கார்னியல் அல்சர் என்று அழைக்கப்படும் கருவிழி புண் நோய்த்தொற்றால் ஏற்படும் கருவிழியில் திறந்த புண் ஆகும். கண்கள் சிவப்பு ஆகுதல், நீர், கண்களில் ரத்தம் வருதல் ஆகியவை அறிகுறிகளாகும். இது கண்களில் வலுவான வலியை ஏற்படுத்துகிறது மற்றும் பார்வை இழப்புக்கு வழிவகுக்கிறது

டிராக்கோமா பாதிப்பால் பார்வை பறிபோனவர்கள் உலகம் முழுவதும் 2 மில்லியன்களுக்கு மேல் உள்ளார்கள். இது தொற்று பாதிப்பாக இருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் கண்கள், கண் இமைகள் மற்றும் மூக்கு அல்லது தொண்டை சுரப்பு மூலம் பரவுகிறது

’விடாமல் உயரும் தங்கம்’ தங்கம் விலை உயர்வுக்கான டாப் 5 காரணங்கள்!