சூர்யா நடிப்பில் மே 1 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தப்படத்தின் ஆரம்பத்தில் கல்யாண மண்டபத்திற்குள் வைத்து எடுக்கப்பட்ட 15 நிமிட காட்சியானது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. காரணம், அந்தக்காட்சி 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சியாக எடுக்கப்பட்டு இருந்ததுதான்.
By Kalyani Pandiyan S May 06, 2025
Hindustan Times Tamil
இந்த நிலையில், அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார்.
உண்மையில் ரெட்ரோ திரைப்படத்தில் இடம் பெற்ற அந்த கல்யாண மண்டப காட்சியானது முதலில் சிங்கள் ஷாட்டாக எடுப்பதற்கான திட்டம் இல்லை. அந்தக்காட்சி 2 சீன்களாகத்தான் இருந்தது; அதாவது, முதலில் கல்யாணத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும். அப்படியே அங்கு கனிமா பாடல் தொடங்கும். அதன் பின்னர் சூர்யாவும் அவர் அப்பாவும் பேசிக்கொள்வார்கள்; அதன் பின்னர் சண்டை என்பதாகத்தான் எழுதப்பட்டிருந்தது.
தான் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சந்தோஷமாக வாழ நினைக்கும் ஒருவனை வாழ்க்கை எந்த கட்டத்திற்கும் கொண்டு செல்லும் என்பதை விளக்கும் விதமாக அந்த காட்சி எனக்கு பட்டது. அந்தக்காட்சி படத்தில் 15 நிமிடமாக வரவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன்.
முதலில் அந்தக் காட்சியை நாங்கள் கடற்கரையில் தான் எடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், கடற்கரையில் எடுக்கும் பொழுது எல்லாமே அருகருகே இருக்கும். அப்படி எடுக்கப்படும் பொழுது கேமரா மூவ்மெண்ட் அனைத்தும் ஒரே ஃப்லோவில் இருக்கும்.
ஆனால், எனக்கு மாடிக்குச் சென்று திரும்பி வந்து காட்சி எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்துதான் கல்யாண மண்டபத்தில் காட்சியை எடுக்கலாம் என்று முடிவு எடுத்தேன். அதற்கு ஏற்றப்படியான மண்டபத்தையும் தேடினோம்.
அந்தக் காட்சியை எடுக்கும் பொழுது எல்லோருமே உற்சாகமாக இருந்தார்கள். காரணம் சவால்கள் தானே எதையும் உற்சாகமாக மாற்றும். அந்தக்காட்சிக்காக தொழில்நுட்ப குழு முதலில் சென்று ஒத்திகை பார்த்தது.
அதன் பின்னர் நடிகர்கள் அனைவரும் சேர்த்து ஒத்திகை பார்த்தோம். தொடர்ந்து காட்சிகளுக்கான ஆடைகள் அனைத்தையும் போட்டுக்கொண்டு மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்தோம். அதன் பின்னர்தான் அந்தக்காட்சி எடுக்கப்பட்டது’ என்று பேசினார்.
அப்துல் கலாமின் இந்த வாக்கியங்களை குழந்தைகளிடம் கூறுங்கள்; அவர்களை உற்சாகப்படுத்தும்!