கேள்வி:- கடலூர் மக்களுக்காக கள செயற்பாட்டாளராக பணியாற்றி உள்ளீர்கள் தற்போது தேர்தலில் நிற்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:- தேர்தலில் நிற்க வேண்டும் என்று நான் பாமகவை அனுகவில்லை; பாமக தரப்பில் இருந்து என்னிடம் ஒருவர் பேசினார். அதன் அடிப்படையில்தான் கடலூரில் போட்டியிடுகிறேன்.
பதில்:- இது சவாலாக இருக்க வாய்ப்பில்லை; ஆளாளுக்கு தலைமை ஏற்க வேண்டும் என துடிக்கிறார்கள். இதை கடந்துதான் வர வேண்டும்.
பதில்:-நெய்வேலியை பாலைவனம் ஆக்கிவிட்டு கையில் திருவோடு கொடுத்துவிட்டு போகப்போகிறது. ஏற்கெனவே எடுத்த நிலங்கள் போக மறுபடியும் நிலங்களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் உள்ள பிரச்னைகளை நான் சென்று நாடாளுமன்றத்தில் பேசினால் புரிய வைக்க முடியும்.
அதெல்லாம் எனது தேர்தல் பரப்புரையில் பாருங்கள். இதை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு என்ன நடந்து இருக்கு; தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சவால் என்று ஒன்றுமே இல்லை; எனக்கு மக்கள் மிகவும் நெருக்கமாக உள்ளார்கள். நான் இந்த மண்ணில் விளையாடிவன், தோப்பில் அலைந்தவன். நான் ஒந்த மண்ணின் விவசாயி, எனக்கு சவால் என்று எதுவும் கிடையாது.