’கடலூரில் எனக்கு சவாலே கிடையாது!’ பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு Exclusive பேட்டி!

By Kathiravan V
Mar 22, 2024

Hindustan Times
Tamil

பாமக சார்பில் திண்டுக்கலில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணத்தில் வழக்கறிஞர் கே.பாலு, ஆரணியில் முனைவர் அ.கணேஷ் குமார், கடலூரில்  தங்கர் பச்சான், மயிலாடுதுறையில்   ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் இரா. தேவதாஸ் உடையார், தருமபுரியில் அரசாங்கம், சேலத்தில் அண்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

பதில்:- தானே புயல் உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் கடலூர், விழுப்புரம் மக்களுக்காக களப்பணி செய்துள்ளேன். அம்மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறேன். இந்த மக்களுக்காக தேர்தலில் நின்று குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

கேள்வி:- கடலூர் மக்களுக்காக கள செயற்பாட்டாளராக பணியாற்றி உள்ளீர்கள் தற்போது தேர்தலில் நிற்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

கேள்வி:- தேர்தலில் நிற்பது தொடர்பாக பாமகவை நீங்கள் அனுகினீர்களா? அல்லது பாமக உங்களை அனுகியதா?

பதில்:- தேர்தலில் நிற்க வேண்டும் என்று நான் பாமகவை அனுகவில்லை; பாமக தரப்பில் இருந்து என்னிடம் ஒருவர் பேசினார். அதன் அடிப்படையில்தான் கடலூரில் போட்டியிடுகிறேன்.  

கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி யாருக்கு சாதகமாக இருக்கும்? 

பதில்:- இது சவாலாக இருக்க வாய்ப்பில்லை; ஆளாளுக்கு தலைமை ஏற்க வேண்டும் என துடிக்கிறார்கள். இதை கடந்துதான் வர வேண்டும். 

கேள்வி:-  கடலூரில் பிரதான பிரச்னையாக எதை பார்க்கிறீர்கள்?

பதில்:-நெய்வேலியை பாலைவனம் ஆக்கிவிட்டு கையில் திருவோடு கொடுத்துவிட்டு போகப்போகிறது. ஏற்கெனவே எடுத்த நிலங்கள் போக மறுபடியும் நிலங்களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் உள்ள பிரச்னைகளை நான் சென்று நாடாளுமன்றத்தில் பேசினால் புரிய வைக்க முடியும். 

பாஜக உடன் பாமக கூட்டணி தமிழர்களுக்கு எதிரானது என்ற விமர்சனம் உள்ளதே?

அதெல்லாம் எனது தேர்தல் பரப்புரையில் பாருங்கள். இதை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது.  தமிழர்களுக்கு ஆதரவாக இங்கு என்ன நடந்து இருக்கு; தமிழில் கட்டாய படிப்பு இல்லை. 55 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் திராவிட கட்சிகள் தமிழை படிக்காமலேயெ எந்த உயரத்திற்கும் செல்லலாம் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. 

கேள்வி:- தேர்தலில் பாமகவுக்கு, உங்களும் உள்ள சவால் என கருதுவது எது?

சவால் என்று ஒன்றுமே இல்லை; எனக்கு மக்கள் மிகவும் நெருக்கமாக உள்ளார்கள். நான் இந்த மண்ணில் விளையாடிவன், தோப்பில் அலைந்தவன். நான் ஒந்த மண்ணின் விவசாயி, எனக்கு சவால் என்று எதுவும் கிடையாது. 

கடலின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் சில விநோதமான உயிரினங்கள்