நாம் வீட்டில் என்ன தான் பிரியாணி செய்தாலும் பாய் வீட்டில் செய்யப்படும் பிரியாணி செய்யப்படும் சுவை வருவதில்லை. அதற்கு காரணம் அங்கு செய்யப்படும் மசாலா தான். வீட்டிலேயே சுவையான மசாலா செய்வதை இங்கு காண்போம். 

By Suguna Devi P
Apr 19, 2025

Hindustan Times
Tamil

தேவையான பொருட்கள்: 3 வற மிளகாய்  7 பிரியாணி இலை 2 டேபிள்ஸ்பூன் மல்லி 1 டேபிள்ஸ்பூன் சீரகம்   1 டீஸ்பூன் ஷா ஜீரா 3 ஜாதிபத்ரி  2 இலவங்கப்பட்டை 1 ஜாதிக்காய்

 1 டீஸ்பூன் கிராம்பு  3 கருப்பு ஏலக்காய் 3 நட்சத்திர சோம்பு 10 ஏலக்காய்  1 டேபிள்ஸ்பூன் மிளகு   1 டீஸ்பூன் சோம்பு  அரை  டீஸ்பூன் மஞ்சள் பொடி

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் ஒவ்வொரு பொருட்களையும் போட்டு வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக வறுத்து ஆற வைக்க வேண்டும்.  

பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் இவை மூன்றையும் வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். உங்களால் வெயிலில் காயவைக்க வசதி இல்லை ஏற்றல் ஒன்றும் பிரச்சனை இல்லை அடுப்பில் வாணலியை வைத்து நன்கு சூடுபடுத்தவும்.

இவை அனைத்தும் ஆறிய பிறகு  அதனை மிக்சி ஜாரில் செய்து நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்தால் போதும் பிரியாணிக்கு சுவையூட்டும், பிரியாணி மசாலா தயார்.

ஒருகிலோ அரிசி, ஒரு கிலோ மட்டன் என்றால்  தாராளமாக இந்த பிரியாணி மசாலாவை இரண்டு ஸ்பூன் வரை பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.

பிரியாணி மட்டும் இல்லாமல் குழம்பு, குருமா என அனைத்திற்கும் இந்த மசலாவை போட்டு செய்யலாம். இது மிகவும் சுவையாக இருக்கும். 

கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!