வீட்டுக்குள்ளேயே ஏசியை ஆன் செய்துவிட்டு குளிர்ச்சியான சூழலில் இருப்பதை அனைத்து வயதினரும் விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேர ஏசியில் இருப்பது சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்
By Muthu Vinayagam Kosalairaman Apr 30, 2025
Hindustan Times Tamil
ஏசியில் இருப்பதை யாராலும் தவிர்க்க முடியாவிட்டாலும், நீண்ட நேரம் ஏசி காற்றில் இருப்பதால் சருமம், தலைமுடி, தொண்டை, மூக்கு என போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்
நீண்ட நேரம் ஏசியில் இருப்பது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து, அரிப்பது போன்ற உணர்வு ஏற்படும்
ஏசி காற்றில் அமர்ந்தவாறு நீண்ட நேரம் லேப்டாப் அல்லது கம்யூட்டரில் பணிபுரிவது கண்களில் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு தன்மை ஏற்படும்
சருமத்தில் எண்ணெய் உற்பத்தி ஏற்படுவது குறையும். இதன் விளைவாக நீரழப்பு ஏற்படும்
ஏசியில் இருந்து வெளிப்படும் வறட்சியான காற்றில் நீண்ட நேரம் இருந்தால் அரிக்கும் தோலழற்சி, ரோசாசியா, செரியாசிஸ் போன்ற சருமம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம்
சருமம் வறட்சி அடைவதால் அதன் நெகிழ்வுதன்மை குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் ஏற்படலாம்
சருமத்தை போல் தலைமுடியையும் வறட்சி அடைய செய்கிறது. இதன் காரணமாக தலைமுடி உடைதல் போன்ற பிரச்னை ஏற்படும்
ஏசியில் இருந்து வெளிப்படும் நுண்ணிய தூசுகள், துகல்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் இதன் விளைவாக தோல் தடிப்புகள், யூர்டிகேரியா, தோல் அலர்ஜி போன்றவை ஏற்படலாம்
நீண்ட நேரம் ஏசியில் இருப்பது நீரழப்பை ஏற்படுத்தும். அத்துடன் அந்த வறட்சியான காற்று தொண்டை கரகரப்பு அல்லது மூக்கடைப்பு போன்ற தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தும்
கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!