காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 25, 2025
Hindustan Times Tamil
சுமார் 10 கருப்பு உலர் திராட்சைகளை ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்தவுடன், அந்த நீரை பருகுவதால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்
ஏராளமான ஊட்டசத்துகள் நிறைந்ததாக கருப்பு உலர் திராட்சை இருந்து வருகிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் கருப்பு உலர் திராட்சை தொற்றுக்களுக்கு எதிராக போராடி உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது
வைட்டமின் சி மற்றும் பி ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் கருப்பு உலர் திராட்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது