கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 28, 2025

Hindustan Times
Tamil

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் சருமம் அதன் பொலிவை இழக்கிறது. சில எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ளலாம்

வியர்வை மற்றும் வெளியே சுற்றுதல் காரணமாக சருமத்தில் துளைகள் ஏற்படலாம். எனவே அதை தடுக்கும் விதமாக காலை அல்லது தூங்குவதற்கு முன் அழுக்குகள் மற்றும் எண்ணெய் தன்மையை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும்

கோடை காலத்திலும் சருமத்துக்கு மாஸ்ட்ரைசர் தேவைப்படுகிறது. எனவே எண்ணெய் தன்மை இல்லை மாஸ்ட்ரைசரை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்ளலாம்

தினமும் காலையில் தவறாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தாலும் இதை செய்ய வேண்டும்

வாரத்துக்கு இரு முறையாவது முகத்தை மசாஜ் அல்லது வீட்டில் உள்ள சரும பராமரிப்பு பொருள்களை வைத்து பேஷியல் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இறந்த செல்கள் நீக்கப்படும்

நீர்ச்சத்து மிக்க பழங்களான தர்ப்பூசணி, வெள்ளரி, சரும் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பட வேண்டும். இவை சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும்

பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. இவை சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாத்து, கொலஜன் உற்பத்தியை அதிகரிக்க தூண்டும்

ஆழ்ந்த தூக்கம் மிக மிக அவசியம். தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூக்கும் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவுவதுடன், அதன் ஆரோக்கியத்தையும் பேனி காக்கிறது

புதுச்சேரி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம்.. இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க!