வெப்பம் அல்லது வெயிலின் தாக்கம் காரணமாக சிலருக்கு பருக்கள், அரிப்பு, வெப்ப வெடிப்புகள் போன்றவை ஏற்படுவதுண்டு
By Muthu Vinayagam Kosalairaman May 08, 2025
Hindustan Times Tamil
கோடை காலத்தில் அதிகமாக இருக்கும் வெப்பம் காரணமாக சருமம் சார்ந்த பிரச்னைகள் அதிகமாக ஏற்படக்கூடும். அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் இவை ஏற்படுகின்றன. குறிப்பாக கைகள், கழுத்து, அந்தரங்க பகுதிகள் இந்த பிரச்னைகள் ஏற்படலாம்
வீட்டை விட்டு வெளியே சென்றாலோ அல்லது வீட்டு வேலை பார்த்தாலோ வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் வியர்வை அதிகமாக ஏற்படுவதுண்டு. எனவே உடலில் வியர்வை தங்காமல் பார்த்துகொள்ள வேண்டும். இதற்கு துணியை வைத்து துடைப்பதோ அல்லது ஷவர் செய்யவோ வேண்டும்
பொதுவாக பலரும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதுண்டு. மாறாக குளிர்ச்சியான நீரில் குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடலின் வெப்பநிலை சமநிலையுடன் இருக்கும்
அதிகமாக தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்த இளநீர், எலுமிச்சை சாறு போன்றவற்றை பருகுவதன் மூலம் உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்
இறுக்கமான, சிந்தடிக் உடைகளில் கோடையில் அணிவதை தவிர்க்க வேண்டும். இலகுவான, காட்டன் துணிகள் காற்று உள்ளே புகும் விதான ஆடைகளும், வியர்வை ஆவியாகும் விதமாக ஆடைகளை அணிவதன் மூலம் சருமத்தில் வெப்பம் காரணமாக பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம்
உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க பாடி லோசன் பயன்படுத்தலாம். ஜெல் அல்லது தண்ணீரால் ஆன லோசன் பயன்படுத்துவதால் சருமத்தில் துளைகளை அடைக்கலாம்
வியர்வை அதிகமாக வெளியேறுவதால் அதை நன்கு துடைத்து சுத்தமாக குளிக்க வேண்டும். அக்குள், அந்தரங்க பகுதிகளில் வியர்வை அதிகமாக வெளியேறும் என்பதால் அந்த பகுதிகளை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்
ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன