உங்க செல்லக் குழந்தைகளுக்கு ஜாதகம் பார்ப்பது சரியா.. தவறா.. ஜோதிடர் விளக்கம்!
Canva
By Pandeeswari Gurusamy Apr 26, 2025
Hindustan Times Tamil
நம் செல்லக் குழந்தைகளுக்கு குழந்தைக்கு ஜாதகம் பார்க்கலாமா எனப்து குறித்து ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
உலகில் உயிர்கள் ஜெனிப்பது என்பது, கர்மாவின் அடிப்படையில்தான். கரு எப்போது உருவாகிறதோ, அப்போதே அதன் விதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. குழந்தை கருவில் இருக்கும் போதே, அதன் 3 மாதங்களிலிருந்து குழந்தைக்கான ஜாதக பலன் தொடங்கிவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
Canva
ஆனால் கரு உருவான நேரத்தை மனிதனால் கணிக்க முடியாது. அதனால்தான் குழந்தை பிறக்கும் நேரத்தை ஜாதகமாக கணிக்கிறோம்.
Pixabay
குழந்தை பிறந்து, முதல் மூச்சை உள்வாங்கும்போதே, கிரக கதிர்களை தனக்குள் எடுத்து கொள்கிறது. அப்போதே குழந்தையின் ஜாதகமும் செயல்பட துவங்கி விடும். ஒரு குழந்தை பிறப்பது, பெற்றோரின் கர்மா, கொடுப்பினை.
Pixabay
குழந்தை பிறந்த பின்னர் பெற்றோர் யோகம் பெற வேண்டுமா? அல்லது அவயோகம் பெற வேண்டுமா? என்பது அந்த பெற்றோரின் ஜாதக அமைப்பை பொறுத்தது.
Pixabay
குழந்தை பிறந்து ஓராண்டுக்கு பிறகே ஜாதகம் எழுத வேண்டும். குழந்தையின் நட்சத்திரம் எது என அறிந்து அதற்கு தகுந்த பெயர்களை சூட்டலாமே தவிர ஓராண்டுக்கு முன்பு குழந்தைக்கு ஜாதகம் கண்டிப்பாக எழுத்தக் கூடாது.
Pixabay
குழந்தைக்கு 12 வயது வரை ஜாதகம் பார்க்க கூடாது. படிப்பு, உடல் ஆரோக்கியம் தொடர்பாக மட்டுமே 12 வயது வரை ஜாதகம் பார்க்க வேண்டும். குழந்தையின் ஜாதகத்தை வைத்து தாய், தந்தை உடல்நலம், லாபம், நஷ்ட கணக்குகளை பார்க்கவோ, சொல்லவோ கூடாது.
Pixabay
குழந்தை பிறந்தது முதல் 3 ஆண்டுகள் வரை தாய் செய்த புண்ணியம், பாவத்தால் வாழ்கிறது. 3 வயது முதல் 6 வயது வரை தந்தை செய்த புண்ணியம், பாவத்தால் வாழ்கிறது.
Pixabay
6 வயது முதல் 9 வயது வரை தாய் வீட்டு குலதெய்வம், அம்மா வழி பாட்டனார் செய்த பாவ, புண்ணிய கணக்கில் வளர்கிறது. 9 வயது முதல் 12 வயது வரை தந்தை வீட்டு குலதெய்வம், அப்பா வழி பாட்டனார் செய்த பாவ, புண்ணிய கணக்கில் வளர்கிறது.
Pixabay
குழந்தை 12 வயது வரை தாய், தந்தை, தாய் வழி பாட்டனார், தந்தை வழி பாட்டனார் செய்த பாவம், புண்ணிய கணக்கின் படி வளர்கிறது. 12 வயதிற்கு மேல் குழந்தையின் ஜாதகத்திற்கு பலன் கூற வேண்டும்.
Pixabay
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் நன்மை நடந்தால் குழந்தை பிறப்பால் நன்மை நடந்தது, தீமை நடந்தால் இந்த குழந்தை பிறப்பால்தான் தீமை நடந்தது என்று கூறி குழந்தை மீது பழி சுமத்துதல் கூடாது.
Pixabay
இதனால் பெற்றோர் குழந்தை உறவு முறை பாதிக்கப்படும். அந்த குழந்தை பெற்றோரின் முழு அன்பை பெற்று நல்ல நிலையில் வளர முடியாது என்பதாலேயே பிறந்த குழந்தையின் ஜாதகத்தை பார்க்க கூடாது என கூறுகிறார்கள்.
Pixabay
பொறுப்பு துறப்பு : இந்த தகவல் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தகவல் நோக்கங்களுக்கு மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களை அணுகவும்.
Canva
கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!