Ghilli Movie:  கில்லித்திரைப்படம் உருவான விதம் குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார். 

By Kalyani Pandiyan S
Jun 26, 2024

Hindustan Times
Tamil

ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார் அவர் பேசும் போது, “கில்லி திரைப்படம் தெலுங்கில் வெளியான ஒக்கடு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அந்தத் திரைப்படத்தை விஜயும், அவரது அப்பாவான எஸ்ஏசியும் பார்த்தார்கள். அப்போது அந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்து விஜய் அவரது அப்பாவிடம், ஒக்கடு உரிமையை நாம் வாங்கிவிடலாம் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் எஸ்.ஏ.சி இந்த படத்தில் விஜயை சரியாக பொருத்தி, பிரமாண்டமாக எடுப்பதற்கு ஏ எம் ரத்தினம்தான் சரியாக இருப்பார் என்று கருதி, என்னை அழைத்தார். 

படத்தை பார்த்த பொழுது, படம் மிகவும் அதிக பொருட்செலவுடன் எடுக்கப்பட வேண்டிய படம் என்பதை நான் கணித்து விட்டேன் இதையடுத்து நான் எஸ்.ஏ.சி சாரிடம், விஜய் இந்த படத்தில் நடிக்கும் பொழுது, படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஆனால், இந்த படத்தின் வெற்றி, அவரது அடுத்த படத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பது தெரியும். ஆகையால், நீங்கள் எனக்கு இந்த படம் செய்தால், இரண்டு படங்களுக்கான கால்சீட்டை தாருங்கள்.. என்று கூறி, முடிவை நாளை சொல்கிறேன் என்று சொல்லி வந்தேன். 

நான் ஏற்கனவே தரணியை வைத்து தூள் என்ற படத்தை அப்போது எடுத்திருந்தேன். ஆகையால், அடுத்த திரைப்படத்திலும் அவருடன் இணைய வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதனால்தான் தரணியை அழைத்து, அந்த படத்தை இயக்க வைத்தேன். கில்லி படத்தை பொருத்தவரை, தெலுங்கில் அந்த திரைப்படம் கிளாஸாக இருக்கும்.

தமிழில் மாஸாக இருக்கும்.கில்லி திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே மாஸாக இருக்கும். படத்தில் இடம்பெற்ற நடிகர் விஜயின் வீடும், அதை சுற்றி இருந்த இடங்களையும், நாங்கள் மிகப்பெரிய செட்டாக வடிவமைத்தோம். மொத்தம் 65,000 sqft  -ல்  மொட்டை மாடி போன்று அதனை நாங்கள் வடிவமைத்தோம். 

அது கடலோரம் இருக்க வேண்டும், பின்னால் லைட் ஹவுஸ் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டதால், நாங்கள் அதனை மகாபலிபுரத்தில் வைத்து எடுத்தோம். அப்போது அந்த செட்டும் ரெடியாகவில்லை. இந்த நிலையில்தான் வீட்டுக்குள் எடுக்க வேண்டிய காட்சிகளை நாங்கள் எடுத்தோம். அப்போதுதான் விஜயின் அம்மாவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

தெலுங்கில் மகேஷ்பாபுவின் அம்மாவாக நடித்த கீதா, அப்போது அமெரிக்காவில் இருந்தார். அதனால், அவரால் முடியாது என்று சொல்லிவிட்டார். அதனை தொடர்ந்து நடிகை சீதாவை  நடிக்கை வைக்க முயற்சி செய்தோம். தேதி பிரச்சினையால் அவராலும் நடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் ஜானகி செபாஸ்டியனை நாங்கள் கமிட் செய்தோம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அந்த படத்தில் இடம் பெற்ற அம்மா கதாபாத்திரம், ஒன்று ஸ்டார் நாயகியாக இருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இயல்பாகவே ஒரு தாய் போல இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகத்தான் அவரை கமிட் செய்தோம்.” என்று பேசினார். 

திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா. பல திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும், பிக்பாஸ் சீசன் 2 வும், ' ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ' என்ற அடல்ட் காமெடி படமும் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.