viral video: கோயிலுக்குள் சினிமா பாடல் பாடி, ஆடிய பெண் காவலர்கள் சஸ்பெண்ட்
மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜெயின் உள்ள புகழ் பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் இருவர் கோயிலின் உள்ளே வைத்து பாலிவுட் சினிமா பாடலை பாடியவாறு நடனமாடியுள்ளனர். கருப்பு நிறை உடை அணிந்திருந்த அவர்கள் இருவரும் பியார் பியார் கர்தே கர்தே என்ற பாடலுக்கு நடனமாட அந்த விடியோ வைரல் ஆகிய நிலையில், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தின் உள்ளே அவர்கள் நடனம் ஆடியதால் சர்ச்சைக்குள்ளானது. அவர்களின் நடன விடியோ இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், கோயில் அலுவலர்கள் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இதன் பின்னர் நடனமாடிய காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் முறையாக கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களே இவ்வாறு நடனம் ஆடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கோயிலின் உள்ள மொபைல் போன்கள் எடுத்து செல்லவும், புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதி கிடையாது. அப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.