Live | உதகையில் நடந்து வரும் துணைவேந்தர்கள் மாநாடு நேரலை.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் பங்கேற்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Live | உதகையில் நடந்து வரும் துணைவேந்தர்கள் மாநாடு நேரலை.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் பங்கேற்பு!

Live | உதகையில் நடந்து வரும் துணைவேந்தர்கள் மாநாடு நேரலை.. துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் பங்கேற்பு!

Published Apr 25, 2025 12:10 PM IST Stalin Navaneethakrishnan
Published Apr 25, 2025 12:10 PM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று தமிழகம் வந்துள்ளார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை 10.40 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவரை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர் ஆகியோர் வரவேற்றனர். இதனையடுத்து, தனி ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் உதகைக்கு புறப்பட்டார். உதகையில் நடந்து வரும் மாநாட்டில் அவர் பங்கேற்று வரும் காட்சிகளின் நேரலை இதோ:

More