Delimitation Issue: தொகுதி மறுவரையறை - எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் வலிமையாக இருக்காது! திருச்சி சிவா
- தொகுதி மறு வரையறை விவகாரத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். We Want Justice என எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா, தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் தொகுதிகள் குறைக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் வலிமையாக இருக்காது என்று கூறினார்.
- தொகுதி மறு வரையறை விவகாரத்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். We Want Justice என எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக ராஜ்யசபா எம்பி திருச்சி சிவா, தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் தொகுதிகள் குறைக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் எங்கள் குரல் வலிமையாக இருக்காது என்று கூறினார்.