'சிந்தூர்னு பேர் வச்சதுக்கு காரணம் இதுதான்..வாய்ப்பு கிடைச்சா நானும் போருக்கு போவேன்’ - நயினார் நாகேந்திரன் உறுதி!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், "இந்தியாவின் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்க காரணம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்கள் செந்தூரம் அதாவது குங்குமத்தை வைக்க முடியவில்லை. அதற்காகத்தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச் செல்வேன். நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை" என்றார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து பேசினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், "இந்தியாவின் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்க காரணம் என்னவென்றால், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்கள் செந்தூரம் அதாவது குங்குமத்தை வைக்க முடியவில்லை. அதற்காகத்தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச் செல்வேன். நான் இதை விளையாட்டுக்குச் சொல்லவில்லை" என்றார்.