Annamalai vs MKStalin: 'தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்ட முதல்வர்' - விளாசும் அண்ணாமலை!
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை கண்டித்து, பாஜக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, சென்னை பனையூரில் இன்று காலை அண்ணாமலை தனது இல்லத்தின் முன்பு கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: "தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்வர் கோட்டைவிட்டுள்ளார்." என்று தெரிவித்தார்.
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தை கண்டித்து, பாஜக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, சென்னை பனையூரில் இன்று காலை அண்ணாமலை தனது இல்லத்தின் முன்பு கருப்பு சட்டை அணிந்து, கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: "தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்வர் கோட்டைவிட்டுள்ளார்." என்று தெரிவித்தார்.