மதுரை சித்திரை திருவிழா ஐந்தாம் நாள்.. பள்ளி சிறுமிகளின் கோலாட்டம், நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  மதுரை சித்திரை திருவிழா ஐந்தாம் நாள்.. பள்ளி சிறுமிகளின் கோலாட்டம், நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்

மதுரை சித்திரை திருவிழா ஐந்தாம் நாள்.. பள்ளி சிறுமிகளின் கோலாட்டம், நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள்

Published May 05, 2025 08:00 AM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 05, 2025 08:00 AM IST

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கிய சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் சன்னதியிலிருந்து தங்கக் குதிரையில் மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை ஆகியோர் எழுந்தருளி மாசி வீதிகளில் சுற்றி வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் மாசி வீதியைச் சுற்றி வலம் வந்தார். பல்லக்கு குதிரையில் பாடல் பின்னணியில் மாசி வீதிகளில் தங்க குதிரையில் பவனி வந்த மீனாட்சி அம்மனை ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தரிசித்தனர். இந்த நிகழ்வின்போது பள்ளி சிறுமிகளின் கோலாட்டம், நடனம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் பகதர்கள் பலரும் கடவுளர் வேடமிட்டு உலா வந்தனர்.

More