viral video: ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விட்ட பிரதமர் மோடியின் கான்வாய்!
- குஜராத் மாநிலம் காந்திநகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இன்று (செப்.30) தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கலுபூர் ரயில் நிலையம் வரை பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் இணைந்து பயணம் செய்து மகிழ்ந்தார். முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து அகமதாபாத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர்- அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வருவதை கண்டார். உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய கான்வாயை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்டார். சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.