On Cam: ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை காப்பற்றிய போலீஸ்
மகாராஷ்ட்ரா மாநிலம் அகோலா ரயில் நிலையத்தில் வயதான பெண் ஒருவர் வேகம் ஓடும் ரயிலில் இருந்து தவறி பிளாட்பார்மில் விழுந்த பெண்ணை வேகமாக ஓடிச் சென்று ரயில்வே பாதுகாப்பு படை காவலர் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வெளியாகி காண்போரை பதைபதைப்புக்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக, ஓடும் ரயில்ல ஏற முற்பட்ட அந்த வயதான பெண் தவறி பிளாட்பாரத்தில் விழுந்து இழுத்து செல்லப்பட்டார். இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்பு காவலர் நொடிப்பொழுதில் சுதாரித்து உடனடியாக அந்த பெண்ணை தண்டவாளம் உள்ளே நோக்கி செல்ல விடாமல் அவரை பிடித்து இழுத்துள்ளார். பின்னர் அங்கிருந்த சிலரும் உதவ, அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த களோபரத்தில் ரயிலும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி பதிவாகியிருந்தது. இதேபோல் நாசிக் ரோடு ரயில் நிலையத்தில் மெதுவாக புறப்பட்ட ரயிலில் ஏறிய முதியவர் தண்டவாளத்துக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்த நிலையில் உடனடியாக பிளாட்பாரத்தில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை காவலர், பொதுமக்கள் இணைந்து அவர் மீட்டனர். மற்றொரு சம்பவத்தில் மும்பை கிழக்கு பகுதியில் உள்ள மான்குர்ட் என்ற ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் ஏறிய பெண் மற்றும் அவரது குழந்தை கூட்ட நெரிசலில் உள்ள செல்ல முடியாமல் கீழே விழுந்தனர். இவர்கள் அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் உடனடியாக காப்பாற்றினார்.