ஆங்கிலத்தில் பேசிய முதியவர்.. அவமரியாதையாக கேள்வி கேட்ட சிறுபான்மை நலத்துறை ஆணையர் மீது புகார்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆங்கிலத்தில் பேசிய முதியவர்.. அவமரியாதையாக கேள்வி கேட்ட சிறுபான்மை நலத்துறை ஆணையர் மீது புகார்

ஆங்கிலத்தில் பேசிய முதியவர்.. அவமரியாதையாக கேள்வி கேட்ட சிறுபான்மை நலத்துறை ஆணையர் மீது புகார்

Published Apr 12, 2025 07:52 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 12, 2025 07:52 PM IST

  • நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நல ஆணைய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ அருண், துணை தலைவர் குத்தூஸ், உறுப்பினர்கள் , மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எஸ்பி அருண் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், பௌத்தம் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்தனர். பின்னர் கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் போது பௌத்த மதத்தினர் சுமார் 10 பேர் சிறுபான்மை தலைவரிடம் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஆணைய தலைவர் அந்த முதியவரை பார்த்து மதுஅருந்திவிட்டு (தண்ணிய போட்டுவிட்டு பேசுகிறீர்கள் என்று நக்கலாக கேட்டார்) என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெளத்த மதத்தினர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் முன்னிலையில் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆணைய தலைவரை சூழ்ந்து. வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்பி அருண் கபிலன் தலைமையிலான போலீசார் ஆணைய தலைவர் ஆட்சியர் ஆகியோரை பாதுகாப்பு நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். பெளத்த மதத்தை சேர்ந்த முதியவரை ஒரு அரசு நிகழ்ச்சியில் அவமரியாதையாக பேசி அவமதித்த சிறுபான்மை நல ஆணைய தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெத்த மத சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே பெத்த மத அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுபான்மை நல ஆணைய தலைவர் மீது நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

More