தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Indian Army Soldier Video Calls Jaish Terrrorist; Asks Him To Surrender In J&k's Kulgam

viral video: தீவிரவாதியிடம் விடியோ காலில் பேசி சரண் அடைய சொன்ன ராணுவ வீரர்

Sep 29, 2022 07:33 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 29, 2022 07:33 PM IST

இந்திய ராணுவ வீரர் ஒருவர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதியுடன் விடியோ காலில் பேசி சரண் அடைய சொன்ன விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஐம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற நேரடி என்கவுண்டரில் தீவிரவாதியிடம் விடியோ காலில் பேசிய இந்திய ராணுவ வீரர் மீண்டும் மீண்டும் அவரிடம் தங்களது படை முன்னிலையில் சரண் அடையுமாறு கேட்டுக்கொள்கிறார். இதில் ராணுவ வீரரிடம் மரியாதையாக பேசும் தீவிரவாதி, சரண் அடைவதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த விடியோ நமது நிறுவனத்துக்கு கிடைத்துள்ள நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த முகமது ஷபி கானி என்ற அந்த நபர் காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர் எனவும், அவரிடம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்ட சரண் அடையுமாறு ராணுவ வீரர் வற்புறுத்தியுள்ளார். அப்போது இந்திய ராணுவத்தினர் பற்றியும், அவர் காஷ்மீரிகளுக்கு தரும் ஆதரவு பற்றியும் பேசிய அந்த நபர், சரணுக்கு மறுப்பு தெரிவித்து நீண்ட நேரம் தன்னால் ராணுவ வீரர்களுக்கு எதிராக சண்டையிட முடியாது எனவும் தெரிவித்தார். இந்த விடியோ அழைப்புக்கு பிறகு அடுத்த சில நிமிடங்களில் தீவிரவாதியான முகமது ஷபி கானியை சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதுபோன்ற என்கவுண்டரில் தீவிரவாதிகள் ராணுவத்தினர் சுற்றி வளைத்தால் அவர்கள் சரண் அடைவதற்கு வாய்ப்புகள் எப்போதும் வழங்குவார்கள். அதேபோல் முகமது ஷபி கானிக்கு வழங்கப்பட்டதோடு, அவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் வெளிநாடுகளை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் சரண் வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் துர்தர்ஷ்டவசமாக முகமது ஷபி கானி ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

More