Gangster killed: பட்டப்பகலில் தாதா சுட்டுக்கொலை! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
ராஜஸ்தானின் மாநிலத்தின் உள்ள மிகவும் மோசமான கேங்ஸ்டரான ராஜு தேதி பட்டப்பகலில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிகர் பகுதி அருகே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்து கேங்ஸ்டர் ராஜு சேத் சுட்டுக்கொல்லப்பட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சேர்ந்தவன் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ரோஹித் கோதரா என்பவர் இந்த படுகொலை சம்பவத்தை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் ஆனந்தபால் சிங் மற்றும் பால்பிர் பனுடா ஆகியோரின் இறப்புக்கு பழிவாங்கவே இந்த படுகொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஷிகரில் ராஜு தேத் தனது வீட்டை விட்டு வெளியேறியபோது நான்கு பேர் அவரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். அவர் மீது மூன்று தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 1995 முதல் மது விற்பனையில் கொடிகட்டி பறந்த ராஜு தேத் பின்னர் கேங்ஸ்டராக உருவெடுத்துள்ளார். ராஜு தேத் கொல்லப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் ராஜு தேத்தை கொன்றவரை கைது செய்ய வேண்டும் என கடையடைப்பு போாரட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்ட ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.