வைர வியாபாரியிடம் ரூ. 20 கோடி நகை திருட்டு! நான்கு பேர் கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்த போலீசார்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  வைர வியாபாரியிடம் ரூ. 20 கோடி நகை திருட்டு! நான்கு பேர் கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

வைர வியாபாரியிடம் ரூ. 20 கோடி நகை திருட்டு! நான்கு பேர் கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

Updated May 06, 2025 11:42 PM IST Muthu Vinayagam Kosalairaman
Updated May 06, 2025 11:42 PM IST

சென்னையில் பிரபல ஹோட்டலில் வைத்து வைர வியாபாரியை தாக்கிவிட்டு ரூ. 20 கோடி மதிப்பில் வைரத்தை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வைர வியாபாரியிடம் நகை வாங்குவதாக ஹோட்டலுக்கு வரவழைத்து அவரை ரூம் ஒன்றில் அடைத்த கும்பல், வைர நகையை திருடி சென்றுள்ளது. இதுதொடர்பாக சென்னை வடபழனி போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளை தூத்துக்குடியில் வைத்து செய்தனர். புகார் அளிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். வைரத்தை திருடிவிட்டு ஜீப்பில் தப்பி சென்ற கும்பல் தூத்துகுடி அருகே செக் போஸ்டில் பிடிபட்டனர். கைதான நான்கு பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

More