சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..3 பேர் பலி! 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.