உலகப்புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா தொடங்கியது.. பல்லாயிரக் கணக்கில் குவியும் பக்தர்கள்!
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று (மே 06) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பூரம் திருவிழாவையொட்டி இன்று காலை கணிமங்கலம் சாஸ்தா கோயிலில் இருந்து 8 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் வடக்கு நாதர்சிவன் கோயிலுக்கு புறப்பட்டனர். இதையடுத்து பஞ்சவாத்தியம் உள்ளிட்ட பல்வேறு மேளங்கள் இசைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான இலஞ்சித்தறை மேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று (மே 06) கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. பூரம் திருவிழாவையொட்டி இன்று காலை கணிமங்கலம் சாஸ்தா கோயிலில் இருந்து 8 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்புடன் வடக்கு நாதர்சிவன் கோயிலுக்கு புறப்பட்டனர். இதையடுத்து பஞ்சவாத்தியம் உள்ளிட்ட பல்வேறு மேளங்கள் இசைக்கப்பட்டன. மிகவும் பிரபலமான இலஞ்சித்தறை மேளம் என அழைக்கப்படும் செண்டை மேளம் இசைக்கப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்.