பிகாரில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து - வீடியோ
- பிகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே இன்று காலை பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்றபோது ரயில் என்ஜினில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தால் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.