‘நடக்காத பணியை நடந்ததா சொல்றீங்க..?’ அமைச்சருடன் விவாதம்.. அதிமுக எம்.எல்.ஏ.,கள் கைது!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ‘நடக்காத பணியை நடந்ததா சொல்றீங்க..?’ அமைச்சருடன் விவாதம்.. அதிமுக எம்.எல்.ஏ.,கள் கைது!

‘நடக்காத பணியை நடந்ததா சொல்றீங்க..?’ அமைச்சருடன் விவாதம்.. அதிமுக எம்.எல்.ஏ.,கள் கைது!

Published May 09, 2025 01:36 PM IST Stalin Navaneethakrishnan
Published May 09, 2025 01:36 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் ஆய்வு மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற உறுப்பினர்களான கோவிந்தசாமி மற்றும் சம்பத்குமார் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது நடைபெறாத பணியை நடைபெறுவதாக சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரனிடம், அதிமுக எம்.எல்.ஏ.,கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு, அவர்களை தாக்க முயற்சித்தனர். இதைத் தொடர்ந்து வெளியேறி அதிமுக எம்.எல்.ஏ.,களை போலீசார் கைது செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

More