தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Afghanistan Madrasa Bombed; Children Among 15 Dead In Samangan Province

Afghanistan Madrasa bombed:ஆப்கானிஸ்தான் மதராசாவில் குண்டுவெடிப்பு - 15 பேர் பலி

Nov 30, 2022 11:23 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 30, 2022 11:23 PM IST

ஆப்கானிஸ்தானில் உள்ள சமங்கன் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஐபக் என்ற நகரத்தில் இன்று மதியம் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மதராசா பள்ளியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் 15 பேரை வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயரிழந்தவர்களில் குழந்தைகள் அதிகமாக இருப்பதாகவும், 25க்கும் மேற்பட்டோர் கடுமையான காயமடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதிய நேரத்தில் நடைபெற்ற தொழுகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று ஆளும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் நிகழ்த்தி இருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சி அமைத்த பிறகு அங்கு ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

More