‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!

‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 27, 2025 08:57 PM IST

‘தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் (SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்’

‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!
‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!

ஆளுமைகள் வாழ்ந்த மண் எட்டயபுரம்

‘‘வணக்கம், தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும், வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எங்களின் எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப் புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எங்கள் எட்டயபுரம்.

எட்டயபுரம் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை
எட்டயபுரம் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை

இத்தகையோரின் பெருமைமிகு வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வேளையில், ஏற்கனவே உள்ள சில வரலாற்றுப் பிழைகளை திருத்தும் பணியும் காலத்தின் கட்டாயமாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் (SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

தவறான தகவலை நீக்க கோரிக்கை

இந்த தவறான தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு, மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம். நமது பாடப் புத்தகத்தில் உள்ள வரலாற்றுப் பிழை குறித்தும் தரவுகளுடன் விளக்கினோம். நாங்கள் தெரிவித்த தகவல்களை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள், இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அமைச்சருக்கு நன்றி

வரலாற்றுப் பிழைகளை திருத்தி உண்மையான வரலாற்றை நம் பிள்ளைகள் கற்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் கேட்ட உடன் கடும் பணிச்சுமைக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி எங்களின் கோரிக்கைக்கு செவி மடுத்த அமைச்சர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்,’’

என்று எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா சந்திர சைதன்யா தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.