தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Worker Killed In Kumari After Drinking Pesticide Mistaking It For Water

குமரியில் சோகம்..தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil
Apr 01, 2023 11:36 AM IST

அழகியபாண்டியபுரம் அருகே தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி
தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி

ட்ரெண்டிங் செய்திகள்

அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. அங்கு வாழைகளுக்கு அடிக்க தண்ணீரில் கலந்து வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை அவர் தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். 

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்