Madurai High court: மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அவமதிப்பு நடவடிக்கை கூடாது ஏன் - நீதிமன்றம்
MADURAI KAMARAJ UNIVERSITY: பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இறப்பு மற்றும் ஓய்வூதியதற்கான பணப்பலன்களை பெறுவதற்கு 16 வருடங்கள் காத்திருக்க முடியாது. இந்த வழக்கில் பல்கலைக்கழகம் கூறும் பதில்கள் ஏற்புடையதாக இல்லை.

காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குனர் தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவிந்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் " மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளேன். ஓய்வு பெற்றதற்கான பணப்பலன்களை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் பணப்பலன்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பண பலன்களை வழங்க உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ராமகிருஷ்ணா அமர்வு, மனுதாரர் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று பின்னர் அவர் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் சட்டத்தின் அடிப்படையில் அவர் இறந்ததை குறிப்பிட்டு ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தற்போது வரை அவர்களுக்கான பணபலன்கள் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இறப்பு மற்றும் ஓய்வூதியதற்கான பணப்பலன்களை பெறுவதற்கு 16 வருடங்கள் காத்திருக்க முடியாது. இந்த வழக்கில் பல்கலைக்கழகம் கூறும் பதில்கள் ஏற்புடையதாக இல்லை. ஆகவே, இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் இறந்து விட்டார்.
பணியாளரின் குடும்பத்தினர் இரக்கமற்ற அதிகாரிகளிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது . இறுதியாக காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மதுரை கல்லூரி கல்வி இணை இயக்குனர் தங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்க பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்