இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை., இந்திய ரயில்வே – வேலை விவரங்கள் உள்ளே…
இந்தியரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ட்ரெண்டிங் செய்திகள்
காலிப்பணியிடம் – 8
சம்பளம் - ரூ.35 ஆயிரம் முதல்
கல்வித்தகுதி - டூரிசம் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பட்டப்படிப்புடன் ஓராண்டுக்கான டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு – 28 வயதுக்குள் இருக்கவேண்டும். பட்டியலின பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் தளர்வு உண்டு.
மேலும்விவரங்களுக்கு - www.irctc.com என்றஇந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களோடு நேர்க்காணலில்பங்கேற்கலாம்.
நேர்காணல்நடைபெறும் முகவரி - 9/10, KolkataJetty, Opp
Sbi Hq (Eastern Region), Strand Road, Kolkata – 700001. என்ற முகவரியில் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு தேசிய திறந்தவெளி பல்கலைகழகத்தில்வேலை
இந்திராகாந்திதேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கானஅறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
கல்வித்தகுதி – 10 அல்லது 12ம் வகுப்பு முடித்திருப்பதோடு ஒரு நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகளும், இந்தியில் 35 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் – குறைந்தபட்சமாக ரூ.19,900 அதிகபட்சமாகமாதம் ரூ.63,200 ஆகும். வயது வரம்பு – 18 முதல் 27 வயதுக்குள்இருக்கவேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயதும், பட்டியலின பிரிவினருக்கு 5 வயதும் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணர் ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பட்டியலின பிரிவினர் ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்தினாலே போதும்.
விண்ணப்பிக்கும்முறை – ஏப்ரல் 20ம் தேதிக்குள் www.ignou.ac.in என்ற இணையதளம்மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஊரக வளர்ச்சித் துறையில் 794 காலியிடங்கள் – மே 27ல் தேர்வு
ஊரகவளர்ச்சி, ஊராட்சித் துறைகளில் காலியாக உள்ள 794 பணியிடங்களுக்கான தேர்வு மே 27ம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னைகலெக்டர் தெரிவித்துள்ள விவரம் - ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறைகளில் மேற்பார்வையாளர், இளநிலை வரைவு அலுவலர் பதவிகளுக்கான 794 காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்காக விண்ணப்பிப்போர் கட்டிடக்கலை பட்டயப் படிப்பு அல்லது கட்டிடக்கலை பட்டப் படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
இதில்பொதுப் பிரிவைசேர்ந்தவர்கள் 37 வயதுக்குட்பட்டவராகவும், இதர வகுப்பினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு இல்லை. இதற்கான தேர்வு மே 27ம் தேதி நடைபெறும்.
தேர்வுக்குவிண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் சென்னை வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற்றுவரும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதற்காக அம்மையத்தை 948713921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல்தகவல்களை தெரிந்துகொள்ளவும் விண்ணப்பிக்கவும் https://www.tnpsc.gov.in என்றஇணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்