Weather Update: இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்! அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை இதோ!
”Weather Update: கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது”

வெப்பநிலை
கோடை காலம் நெருங்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேர வானிலை
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.