Weather Update: இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்! அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்! அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை இதோ!

Weather Update: இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்! அடுத்த 7 தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை இதோ!

Kathiravan V HT Tamil
Published Mar 15, 2024 04:25 PM IST

”Weather Update: கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது”

வெப்பநிலை
வெப்பநிலை

கடந்த 24 மணி நேர வானிலை

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக ஈரோட்டில் அதிகபட்சமாக 40.2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.

குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. 

இன்றைய வானிலை நிலவரம்

இன்று முதல் மார்ச் 19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. 

மார்ச் 20  மற்றும் மார்ச் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

மார்ச் 15 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். எனவும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.

உணவு

லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.

தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.

வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை

வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.

தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.

சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.

தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.