Weather Update: ’மக்களே உஷார்! கொளுத்த போகும் வெப்பம்! மழை எச்சரிக்கையும் இருக்கு!’ எங்கு தெரியுமா?
”Weather Update:குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைவாக பதிவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது”
கோடை காலம் நெருங்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேர வானிலை
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைவாக பதிவாகி உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இன்றைய வானிலை நிலவரம்
இன்று (மார்ச் 14) முதல் மார்ச் 19 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் மார்ச் 20ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று முதல் முதல் வரும் மார்ச் 16 ஆம் தேதி வரை; தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், மார்ச் 14ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செய்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-
தண்ணீர்
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
உணவு
லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
ஆடை
வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
ட்விட்டர் : https://twitter.com/httamilnews
பேஸ்புக்: https://www.facebook.com/HTTamilNews
யூடியூப்: https://www.youtube.com/@httamil
கூகுள் நியூஸ்: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்