Weather Update: ஹேப்பி நியூஸ் மக்களே.. உருவானது இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் நாளை கனமழைதான்!
Weather Update: அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ள நிலையில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி
அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளது. இது இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவ வாய்ப்பு உள்ளது அதன் பிறகு இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு ஆகும். இதனால் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
22.05.2024: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்று காலை 10 மணிவரை செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
23.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சுன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25.05.2024 முதல் 27.05.2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
21.05.2024 முதல் 25.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
21.05.2024; அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2° முதல் 3° செல்சியஸ் வரை இயல்பை விட குறையக்கூடும்.
22.05.2024 & 23.05.2024: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஓட்டி இருக்கக்கூடும்.
24.05.2024 & 25.05.2024:அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்' பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்