Weather Update : மக்களே உஷார்.. இன்று கனமழை வாய்ப்புள்ள பகுதிகள் இதுதான்.. எந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை பாருங்க!
Weather Update : இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை நிலவரப்படி கோவையில் 200 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

Weather Update : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும், இரவு நேரத்தில் மழையும் கொட்டி வருகிறது. இந்நிலையில் நீலகிரி கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை துவங்கி வருகிறது. இந்த நிலையில், மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆரஞ்ச் அலார்ட்
இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை நிலவரப்படி கோவையில் 200 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.