Tamil Top 10 News: 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு முதல் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வரை - டாப் 10 நியூஸ்
28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு, ரூ.115 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட டாப் 10 செய்திகளை சுருக்கமாக இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒருவர் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பெந்தகோஸ்து சபை கட்டடத்தின் 2வது மாடியில், பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்த நபர், ஏணியின் கயிறு அறுந்ததில் கீழே விழுந்து உயிரிழப்பு. வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிளம்பர் ஆபிரகாம் (60) என்பவரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.