Tamil News  /  Tamilnadu  /  'We Will File A Chargesheet Against Arudra In Two Weeks' Ig Asiyammal Said
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர் சந்திப்பு
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர் சந்திப்பு

Aarudhra Gold: ’ஆருத்ரா மீது இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம்’ ஐஜி ஆசியம்மாள்

26 May 2023, 16:59 ISTKathiravan V
26 May 2023, 16:59 IST

”தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் வழக்கமான போன்களில் பேசாமல் வாட்சப் அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேசி வருகின்றனர்”

பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொருளாதார குற்றப்பிரிவில் 1-1-2023 முதல் 15-5-2023 வரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பழைய வழக்குகளில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏமாற்றப்பட்ட தொகை 350 கோடி. கடந்த இரண்டு நாட்களில் ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் இரண்டு பேரும், ஆருத்ரா வழக்கில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் கிளை பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,ஹிஜாவு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே 17ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். ஹிஜாப், ஐ.எப்.எஸ். வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் ஆருத்ராவில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் .

தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் வழக்கமான போன்களில் பேசாமல் வாட்சப் அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேசி வருகின்றனர். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு ஆர்.சி.என் நோட்டீஸ் தர நடவடிக்கை எடுத்துள்ளோம் என ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்