Annamalai vs Anbil Mahesh: ’BSNL பாக்கி!’ வாயை கொடுத்து வம்பில் சிக்கினாரா அன்பில்?! அம்பலப்படுத்திய அண்ணாமலை!
இண்டர்நெட் சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை 1.5 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.

இண்டர்நெட் சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை 1.5 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.
இண்டர்நெட் நிலுவை தொகை பாக்கி
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய சேவை கட்டணத்தில் ரூ.1.5 கோடி நிலுவை வைக்கப்பட்டு உள்ளதாகவும், இத்தொகையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழக்கப்பட்டு இருந்தது.