’அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு துணை முதல்வர் பதவியை தர தயாராக இருந்தது’ உடைத்து பேசிய திருமா! நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு துணை முதல்வர் பதவியை தர தயாராக இருந்தது’ உடைத்து பேசிய திருமா! நடந்தது என்ன?

’அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு துணை முதல்வர் பதவியை தர தயாராக இருந்தது’ உடைத்து பேசிய திருமா! நடந்தது என்ன?

Kathiravan V HT Tamil
Published Apr 27, 2025 02:10 PM IST

”அதிமுக நமக்கு பல தொகுதிகளை தர தயாராக உள்ளது. கூட்டணி அரசுக்கும், ஆட்சிக்கும் உடன்பட தயாராக உள்ளது. போனால் துணை முதலமைச்சர் வரையில் போகலாம். கூடுதலாக 3 அல்லது 4 அமைச்சர்கள் பதவியையும் பெறலாம் என்று ஆசை காட்டிய சிலரும் உண்டு”

’அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு துணை முதல்வர் பதவியை தர தயாராக இருந்தது’ உடைத்து பேசிய திருமா! நடந்தது என்ன?
’அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு துணை முதல்வர் பதவியை தர தயாராக இருந்தது’ உடைத்து பேசிய திருமா! நடந்தது என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

திமுக கூட்டணியில் உறுதி

திருமாவளவன், தற்காலிக அரசியல் ஆதாயங்களுக்காக எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டார். “திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கும் சூழ்ச்சி அரசியல்வாதி நான் அல்ல,” என்றார். ஒரே நேரத்தில் இரண்டு அணிகளிலும் பேசிக் கொண்டே இருக்கும் ராஜதந்திரம். பாமகவோடும் சேரமாட்டோம், பாஜகவோடும் சேரமாட்டோம். அக்கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் என்ன பாதிப்பு வந்தாலும் அதை பற்றி நான் கவலைப்படமாட்டேன் என்றார்.

விஜய்யின் அழைப்பை புறக்கணித்தது ஏன்?

நடிகர் விஜய்யின் கட்சி நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தபோது, அதை புறக்கணித்தது குறித்து திருமாவளவன் விளக்கினார். “விகடன் இதழ் சார்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால், தவறான புரிதலை ஏற்படுத்தி, நாம் இருக்கும் கூட்டணி பலவீனமடையக் கூடாது. அது பாஜகவுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதை யோசித்து அந்த விழாவை புறக்கணித்தேன்,” என்றார். விஜய்யுடன் கூட்டணி வைப்பது குறித்த கதவையும் மூடிவிட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.

ஆசைகளால் வீழ்த்திவிட முடியாது

அதிமுக நமக்கு பல தொகுதிகளை தர தயாராக உள்ளது. கூட்டணி அரசுக்கும், ஆட்சிக்கும் உடன்பட தயாராக உள்ளது. போனால் துணை முதலமைச்சர் வரையில் போகலாம். கூடுதலாக 3 அல்லது 4 அமைச்சர்கள் பதவியையும் பெறலாம் என்று ஆசை காட்டிய சிலரும் உண்டு, நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல திருமாவளவன் இல்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதி செய்து உள்ளேன், இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்திவிட முடியாது.