பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! விமானத்தில் அழைத்து வர கூட பணம் இல்லையா? அதிமுக கண்டனம்!
“உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது! என ஜெயக்குமார் ட்வீட்

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது, பீகார் தர்பங்கா பல்கலைக் கழகத்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது முதுகில் தாக்குதல் நடத்தி உள்ளனர். பிறகு தமிழக வீராங்கனை தாக்குதல் நடத்தினார். விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பயிற்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், பயிற்சியாளர் விசாரணைக்காக மட்டுமே அழைத்து செல்லப்பட்டு உள்ளதாகவும் தமிழக விளையாட்டுத்துறை செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்து உள்ளார்.
அதிமுக கண்டனம்!
பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ’எக்ஸ்’ தள பக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிவிட்டுள்ள வலைத்தள பதிவில், “உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!
