சர்ச்சைகளுக்கு இடையே ஆளுநர் நடத்த இருந்த துணை வேந்தர்கள் மாநாடு! புறக்கணித்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள்!
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சார்பில் உதகையில் இன்று (25/04/2025) மற்றும் நாளை (26/04/2025) நடக்க இருந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டினை துணை வேந்தர்கள் புறக்கணித்துள்ளனர். முன்னதாக தமிழ்நாடு அரசிற்கு எதிராக ஆளுநர் இந்த மாநாட்டினை நடித்துவதாக பேச்சு எழுந்தது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், இன்று ஏப்ரல் 25 மற்றும் நாளை 26 ஆகிய தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கவிருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்புவிடப்பட்டு இருந்தது. ஆனால் அனைத்து துணை வேந்தர்களும் இந்த மாநாட்டினை புறக்கணித்து ஆளுநரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
உதகையில் மாநாடு
தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26, 2025 தேதிகளில் ஆளுநர் மாளிகை உதகமண்டலத்தில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரு. ஜக்தீப் தன்கர், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத்தலைவர், முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளார்.
ஏப்ரல் 25, 2025 அன்று துணைவேந்தர்கள் மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்கள். திரு. ஆர்.என்.ரவி, மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்-தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளார்கள்.
மேலும் படிக்க | உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி! 2 மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
குடியரசு துணைத் தலைவர் பயணம் ரத்தாகுமா?
துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வர இருக்கிறார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு, ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநாட்டின் நோக்கம்
துணை வேந்தர்கள் மாநாட்டின் நோக்கம், தேசிய கல்விக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்விசார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறவின் பயன்பாடு, கல்வி நிறுவனங்களில் நிதி மேலாண்மை, |ஆராய்ச்சி சிறப்பம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் திறன் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மற்றும் தொழில் குறித்த விரிவான விவாதங்கள் மற்றும் கலந்தாய்வு அமர்வுகள் இம்மாநாட்டில் நடத்தப்படவுள்ளன. கல்வித்துறை, அரசு மற்றும் தொழிற்துறையைச் சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் மேற்கண்ட தலைப்புகளில் உரையாற்ற இருந்தார்கள். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் அவர்கள் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லைகள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற ளார்கள்.
புதுமையான அணுகுமுறைகளே நோக்கம்
இம்மாநாடு தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களின் துணைவேந்தர்களை ஒன்றிணைத்து பணியாற்றுவதையும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதையும், உயர்கல்விக்கான புதுமையான அணுகுமுறைகளை கொண்டுள்ளது. ஆராய்வதையும் நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கீழ் இயங்கும் 21 பல்கலை.யில், 6 பல்கலைக்கழங்களில் மட்டுமே துணைவேந்தர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த மாநாட்டினை புறக்கணித்து உள்ளனர்.

டாபிக்ஸ்